நடிகர் விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

விஜய்சேதுபதி நடித்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' நேற்று வெளியான நிலையில், தற்போது வளசரவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமா வாழ்க்கையை துவங்கிய விஜய்சேதுபதி மணிரத்னம், சூப்பர்ஸ்டார் என சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு உயர்ந்துள்ளார். மேலும், சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்தும் போல்ட்டாக பேசி வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த விஜய்சேதுபதி, தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தும், சில சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்தும் வரும், விஜய்சேதுபதி மீது இதுவரை எந்த புகாரும் யாரும் தெரிவிக்கவில்லை.

சினிமா துறையிலும் அவருக்கு பெரிய அளவில் எதிரிகள் யாரும் இல்லை. ரசிகர்கள் மற்றும் மக்களின் அன்பு பெற்று மக்கள் செல்வனாக உயர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றதாகவும், இன்று வழக்கமான ஆய்வு செய்வதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சில கோப்புகளை வருமான வரித்தாக்கலின் போது, விஜய்சேதுபதி சரியாக செய்யாததால், அதனை வாங்க வருமான வரித்துறையினர் நேரில் வந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

More News >>