நன்றி மறப்பது நன்றன்று- ஸ்டாலினுக்கு பாடம் நடத்திய தம்பிதுரை

கருணாநிதியை முதலமைச்சராக்க, எம்.ஜி.ஆர் பாடுபட்ட நன்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உத்தரவிட்டார்.

பின்னர் பேசிய அவர், "திமுகவின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் பேருதவியாக இருந்தார். திமுகவை கட்டிக்காத்தவர் எம்ஜிஆர் என்று அண்ணா கூறியுள்ளார். கருணாநிதியை முதலமைச்சராக்க எம்ஜிஆர் பாடுபட்டார்."

"எனவே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும். தனது தந்தையை முதலமைச்சர் ஆக்குவதற்கு எம்ஜிஆர் செய்த உதவியை ஸ்டாலின் மறக்கக் கூடாது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்." என தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார்.

More News >>