ரியல் ரிவால்வர் ராணியாகும் டாப்ஸி!

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் தயாரிக்கும் புதிய படத்தில், துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்ஸி நடிக்கவுள்ளார். இதற்காக, நிஜமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் டாப்ஸி.

சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ படத்தில் சைக்கோ வில்லனாக அறிமுகமானவர் அனுராக் காஷ்யாப். இவர், பிரபல பாலிவுட் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில், அண்மையில் வெளியான பாலிவுட் படமான மன்மர்ஜியான் படத்தில் டாப்சி நாயகியாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு, அபிஷேக் பச்சனுக்கும் இந்த படம் நல்ல புகழை பெற்றுத் தந்தது.

இந்நிலையில், அனுராக் காஷ்யாப் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். துப்பாக்கி சுடும் வீராங்கனையின் வாழ்க்கையை மையமாக வைத்து உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ள அந்த படத்தை துஷார் ஹிராநந்தினி இயக்குகிறார். இதில், டாப்ஸி நாயகியாக நடிப்பதால், நிஜமாகவே துப்பாக்கி பயிற்சி பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் டாப்ஸி. வரும் ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

பாலிவுட்டில், கலக்கி வரும் டாப்ஸி, தமிழிலும் உமன் சென்ட்ரிக் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வருகிறது.

 

More News >>