தன்னை போலீஸ் என்று கூறி பிச்சைக்காரரை தாக்கிய அதிமுக நிர்வாகி!

சாலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வயதான பிச்சைக்காரர் ஒருவரை அதிமுக நிர்வாகி பிரம்பால் அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்தும் வரும் முதியவர் ஒருவர் அங்குள்ள சாலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.  அப்போது கையில் பிரம்புடன் அங்கு வந்த அதிமுக நிர்வாகி ஒருவர் தன்னை காவல் அதிகாரி என்று கூறிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரரை அடித்தார்.

பேருந்துக்காக காத்திருந்த மக்கள் சொல்லியும் கேட்காமல் அந்த நபர் முதியவரை கண்டபடி பிரம்பால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் மயங்கி விழுந்துவிட்டார்.

More News >>