கேரளா போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு சென்னையில் பரபரப்பு?

 

சென்னை விருகம்பாக்கத்தில் கேரளா போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மஹாராஜா என்பவர் கேரளாவில் நிதிமோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கேரளா போலீஸ் அவரைப் பிடிக்க சென்னை வந்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் தங்கியிருந்த மஹாராஜாவைக் கேரளா போலீஸ் கைது செய்தபோது அவரின் உறவினர்கள் போலீஸாரைத் தடுத்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கேரளா போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்த கூட்டத்தை பயமுறுத்தி மஹாராஜாவைக் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் விருகம்பாக்கம் காவல்துறையினர் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>