பேருந்துக்கு தீவைத்து மாணவர்கள் போராட்டம்-பீகாரில்

 

பீகார் மாநிலம் புத்தகயா மகத் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிட உயர் நீதிமன்றம் தடை வழங்கிய நிலையில் நாளை மறு நாள் நடக்கவுள்ள தேர்வுகளில் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த மகத் பல்கலைக்கழகத்தினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 32 கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரின் புத்தகயாவில் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஒரு பேருந்தைத் தீவைத்து எரித்துள்ளனர். தீயணைப்புப் படையினர் அங்கு வருவதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு வரும் வரை மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று தெரிவித்து உள்ளார்கள்

More News >>