ரசிகர்களுக்குக் கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்குக் கிடா வெட்டி விருந்து வைக்க வேண்டும் என்பது என் ஆசை என்று ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்களை சந்தித்து வந்தார். இதனால், தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு ஆறு நாள்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதுரையில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம்; தாய், பெற்றோர், பெரியோர் காலில் மட்டும் விழுங்கள். பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழவேண்டும் என அவசியமில்லை” என்றார்.

மேலும் ''எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம். ரசிகர்களுக்குக் கிடா வெட்டி விருந்து வைக்க வேண்டும் என்பது என் ஆசை. அதுக்கு ஒரு நாள் வரும். ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறொரு இடத்தில் சாப்பாடு போடுவேன்'' எனக் கூறினார்.

More News >>