சென்னை கிண்டியில் கார் உதிரிபாக குடோனில் பயங்கர தீ விபத்து

கிண்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாக குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

கிண்டி தொழிற்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் வழியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் சேவை மையம் உள்ளது.

இதன் அருகில், பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு சுமார் 11.55 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு துறையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்டடனர். அதற்குள் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது.

இரண்டு மணி நேரம் போராட்த்திற்கு பிறகு, வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், குடோனில் இருந்த லட்சக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

தீ விபத்து, நள்ளிரவில் ஏற்பட்டதால் உயிர் சேதம் இல்லை. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், அசம்பாவிதத்தை தடுக்க தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

More News >>