சபரிமலை தீர்ப்பு: நவ்யா நாயர் எதிர்ப்பு !

அனைத்து வயது பெண்களும், சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல தரப்பிலும், பாராட்டுக்கள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், நடிகை நவ்யா நாயர் சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அழகிய தீயே, மாயக்கண்ணாடி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நவ்யா நாயர், மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக சபரிமலையில் வயதுக்கு வந்த பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் சபரிமலையில், அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என 4பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தற்போது, கோர்ட் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.

இருந்தாலும், சபரிமலை கோவிலின் பாரம்பரிய பழக்கத்தை சிதைப்பது தவறான விஷயம் என்றும் பழைய மரபையே பின்பற்ற வேண்டும் எனவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.

More News >>