பரியேறும் பெருமாள் படக்குழுவை பாராட்டிய கமல்!

பா. ரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், படக்குழுவை நடிகர் கமல் பாராட்டியுள்ளார்.

சாதி வெறி மற்றும் ஆணவ கொலைகளுக்கு சாட்டையடி கேள்வியாக அமைந்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலும், நெஞ்சை உலுக்கி கேள்வி கேட்கும் வகையில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விமர்சகர்களே போற்றும் அளவிற்கு மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார். தனது குருநாதர் ராம் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் ஆகிய இரு ஜாம்பவான்களையும் முதல் படத்திலேயே மிஞ்சிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித், தனது டுவிட்டர் பக்கத்தில், இந்நிகழ்வின் புகைப்படங்களை பதிவிட்டு, நடிகர் கமலுக்கு தனது நன்றியையும் பெருமகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

More News >>