மாவீரன் பிரபாகரனாக மாஸ் காட்டவுள்ள பாபிசிம்ஹா !

பீட்ஸா படம் மூலம் அறிமுகமான பாபி சிம்ஹாவுக்கு, ஜிகர்த்தண்டா சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்தது.

குணசித்ர நடிகராக களமிறங்கிய பாபி சிம்ஹா, வில்லன், ஹீரோ என இரண்டு அவதாரங்களிலும் கலக்கி வருகிறார். சாமி ஸ்கொயர் படத்தில் வில்லனாக மிரட்டிய பாபி சிம்ஹா, தற்போது ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. உனக்குள் நான், லைட்மேன், நீலம் ஆகிய படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமாரின் இயக்கத்தில் பாபிசிம்ஹா பிரபாகரனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக வல்லவனுக்கு வல்லவன் படத்தில் சேகுவேரா போன்ற தோற்றத்தில் பாபிசிம்ஹா நடித்துள்ளார்.

வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் வெளிவந்த நீலம் படம் இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப் பட்டதால், தணிக்கை குழுவினர் படத்திற்கு தடை வைத்தது குறிப்பிடத்தக்கது.

More News >>