தனுஸ்ரீ தத்தாவை பிக்பாஸ் இல்லத்தில் அனுமதித்தால் அவ்வளவுதான்..

பாலிவுட்டில் பாலியல் தொல்லை புயலை கிளப்பியுள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா. விஷாலின், ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் ஆண்களே பிடிக்காது என்ற கேரக்டரில் நடித்தாரே அவரே தான்.. இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், ஆஷிக் பனாயா பாடலில், மேலாடையை கழட்டி படுகவர்ச்சியாக நடித்து இந்தியா முழுவதும் பரீச்சையமானவர்.

தற்போது, காலாவில் வில்லனாக நடித்த பாலிவுட்டின் மூத்த நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும், பால் தாக்ரேவின் மகன் ராஜ்தாக்ரே தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், இதனை வெளிப்படையாக பேசியதால், என்னை கொல்ல ஆட்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

நானா படேகரின் தூண்டுதலின்பேரில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தனுஸ்ரீ தத்தாவின் காரை வழிமறித்துத் தாக்கியதாக வெளியான வீடியோவும் வைரலானது.

இந்நிலையில், சர்ச்சைகளை கிளப்பினால், ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்12ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதால் தான் தனுஸ்ரீ இவ்வாறு செய்வதாக ஒரு தகவல் கிளம்பியது.

இதையடுத்து லோனவாலாவில் உள்ள பிக்பாஸ் அரங்கத்துக்குச் சென்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தொண்டர்கள், பிக்பாஸ் வீட்டிற்குள் தனுஸ்ரீ தத்தாவை அனுமதிக்கக் கூடாது என்றும், மீறி அனுமதித்தால் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

More News >>