பெண்களை தொந்தரவு செய்பவர்களா நீங்கள் - 10 ஆண்டுகள் சிறைக்கு தயாராகுங்கள்!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆட்களை கடத்துதல், அடிமைப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறையும், சம்பந்தப்பட்ட நபர்கள், மறுபடியும் மறுபடியும் இதே குற்றங்களை செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கும் வகையில் இந்த புதிய சட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொத்தடிமைகளாக வைத்திருத்தல், ஆபாச படம் எடுத்தல், உடலிலுள்ள உடல் உறுப்புகளை அகற்றுதல், கட்டாயமாக பிச்சை எடுக்க வைப்பது போன்றவை, புதிய சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கத்தக்க குற்றங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

மிரட்டித் திருமணம் செய்வது, பணம் போதைப்பொருட்கள் போன்றவற்றை கொடுத்து திருமணத்துக்கு நிர்ப்பந்தம் செய்வது, முன்கூட்டியே திட்டமிட்டு மோசடி செய்து திருமணம் செய்வது போன்ற குற்றங்களிலும் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், இதில் கொடூர குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

More News >>