கனமழை- தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு வரும் 7ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

வரும் 7ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை.7ஆம்தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல் அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்  எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக தீவிரமாக கனமழையை எதிர்பார்க்கும் போது ரெட் அலர்ட் எச்சரிக்கை தரப்படும் அந்த நேரத்தில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது.

அக்டோபர் 7ஆம் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

More News >>