என்னை பொறுத்தளவு ஜெயக்குமார் காமெடியன் - டிடிவி தினகரன் அதிரடி

ஜெயக்குமார் பேசுவதை பொருட்டாக கருதுவதே இல்லை. என்னை பொறுத்தளவு அவர் காமெடியன் அவ்வளவே என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக அணிகளை தோற்கடித்து சுயேடையாக நின்ற டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் சிறையில் இருக்கும் சசிகலா அவர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் ஆசி பெற்றேன். சசிகலா மவுன விரதம் இருக்கிறார். ஜெயலலிதாவின் நினைவு தினத்திலிருந்து மவுன விரதத்தில் இருக்கிறார் சசிகலா.

அதிமுகவிலிருந்து யாரையும் நீக்குவதற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-க்கு அதிகாரம் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை, பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

அமைச்சர் ஜெயக்குமார் என்னை மூட்டைப்பூச்சி என கூறியுள்ளார். ஜெயக்குமார் பேசுவதை பொருட்டாக கருதுவதே இல்லை. என்னை பொறுத்தளவு அவர் காமெடியன் அவ்வளவே” என்று தெரிவித்துள்ளார்.

More News >>