சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேருக்கு தூக்கு தண்டனை

தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பான வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்து குற்றவாளிகள் என நிரூபித்த நிலையில், அவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்பட்டது.

அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

More News >>