தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீட்டர் மழையும் செங்கல்பட்டில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. .வரும் 8ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது .இது அடுத்த ஓரிரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் கடல் பகுதியில் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு பருவமழை வட இந்திய பகுதிகளில் இருந்து அடுத்து வரும் மூன்று தினங்களில் படிப்படியாக விலகி வரும். வரும் 8ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா பகுதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

குமரி, லட்சத் தீவுகள், தென் கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More News >>