பிரபாஸின் அதிரடி பிஸ்னஸ் பிளான் பற்றி தெரியுமா?

பாகுபலி படத்தின் மூலம் உலக அரங்கில் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது, சஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் சம்பாதித்த பெரும் பணத்தை தியேட்டர் ஒன்றை வாங்க செலவிட்டுள்ளாராம்.

பாகுபலி படத்திற்காக பிரபாசுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதற்கு முன்னரும் பல தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை குவித்துள்ளார் பிரபாஸ், தான் சம்பாதித்த மொத்த பணத்தில், பெரும் தொகையை, ஆந்திராவின் நெல்லூரில் உள்ள மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் UV Creations நிறுவனத்தின் தியேட்டர் ஒன்றை வாங்க வாரி இரைத்துள்ளாராம் பிரபாஸ்.

இந்த தியேட்டர், உலகின் மூன்றாவது மிகப்பெரிய தியேட்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. பிரபாஸுக்கு முன்னதாகவே தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் இதுபோல தியேட்டர்களில் பணத்தை முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>