சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில், இன்று சென்னையில், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போமல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான பகுதியில் மழை பெய்து வருகிறது.

சென்னை பொறுத்த வரையில், கடந்த இரண்டு தினங்களிலும் நள்ளிரவில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை உள்பட 6 மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் விடுமுறை இல்லை என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

More News >>