தீராத சாதி நோய் பெண் மரத்தில் கட்டி உதைத்த கொடுமை-பீகாரில்

பீகார் மாநிலத்தில் வேறு சாதி ஆணுடன் ஊரை விட்டு ஓடிய பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அருகே உள்ள ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த பெண் சில நாட்களுக்கு முன்ப வேறு சாதி ஆணுடன் ஊரை விட்டு ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அந்த பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த வேறொரு கிராமத்தில் வசித்து வருவது கிராமத்தினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ராஜூலி கிராமத்து பஞ்சாயத்தார் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடிச்சென்று அடித்து இழுத்து வந்துள்ளனர்.

பஞ்சாயத்து உத்தரவுப்படி அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து 5 மணிநேரம் விடாமல் அடித்துள்ளனர்.

 

பெண்ணின் பெற்றோர்களும் பஞ்சாயத்து கொடுத்த தீர்ப்பை ஆதாரித்து மகள் அடி வாங்கும் காட்சியை பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை கூறுகையில் எனது மகள் தன்னுடைய விருப்பத்தை மீறி வேறு சாதி ஆணுடன் திருமணம் செய்து கொண்டதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாயத்து கொடுத்து தண்டனை சரிதான் என்றும் கூறினார்.

More News >>