பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்திய காங்கிரஸ் செயலாளர் கைது!

பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தி போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் இளைஞரணி மாநில செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிம்லா காங்கிரஸ் இளைஞரணி மாநில செயலாளர் ஓ.பி.தாகுர். இவர் அப்பகுதியில் உள்ள சுவர்களில் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துமாறு வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளார். சுமார் 86 கி.மீ தூரத்திற்கு ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஜகவினர், போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் மூலம் போஸ்டர் ஒட்டியவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு காங்கிரஸ் இளைஞரணியை சேர்ந்தவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து, ஜாமினில் ஓ.பி.தாகுர் விடுதலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை காணும் போது நீதிமன்றத்தை, தமிழக மக்களை, காவல்துறை அதிகாரிகளை மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசியவர்கள் மீது இந்த அரசு காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒருதலைபட்ச அதிகார ஆதரவாகவே மக்களுக்கு நினைக்க தோன்றும்.

More News >>