வங்க கடலில் லூபன் புயல்-கேரளா தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

பாலசந்திரன் கூறியது "நேற்று அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'லூபன் புயல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் மழை பெய்யும். லூபன் புயல் ஓமனில் கரையை கடக்கும் எனவும் அதே சமயம் வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக உருவாகி அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக உருவாகி, ஒரிசாவை நோக்கி புயல் நகரும்.

இந்த புயல் சின்னத்தால் காற்றின் போக்கு மற்றும் வளிமண்டல ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்படும். இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுள்ளது.

புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் மாறியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த இரண்டு புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குனர்.

More News >>