பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாப பலி-சென்னையில்

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் அதில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் ஆர்.ஆர். அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் இரண்டாவது தளத்தில் சரோஜா என்பவர் தனது மகள் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை தனது வீட்டின் பால்கனியில் சரோஜா அமர்ந்திருந்தார். ஏற்கனவே பழுதடைந்த பால்கனி என்பதால் திடீரென அது இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி சரோஜா இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்தார்.

படுகாயமடைந்த நிலையில் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More News >>