அரசு தொலைக்காட்சி போல தமிழக வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் இலவசம்!

இலவச செட்டாப் பாக்ஸ் அரசு சார்பில அனைத்து வீட்டுக்கும் வழங்கங்பபடும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு நகரஙகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்னக. கடந்த 2012ம் ஆண்டு சென்னை பகுதிக்கு உரிமம் வழங்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருகிறது.

இது குறித்து தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் மணிகண்டன், ''தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு மத்திய அரசின் உரிமம் வழங்கப்படடுள்ளதால், அரசு சார்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதார்

More News >>