கர்நாடகாவில் நெகிழ்ச்சி: இறந்த மகனுக்காக சிலை வைத்து வழிபடும் பெற்றோர்

கர்நாடகாவில் இறந்த மகனுக்கு சிலை வைத்து பெற்றோர் வழிபடும் நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் வேதசூகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. இவரது மனைவி ஈரம்மா. இவர்களுக்கு விஜயக்குமார் என்ற மகன் இருந்தார்.

விஜயக்குமார் மஞ்சள் காமலை நோயால் அவதிப்பட்டு சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனின் மறைவை தாங்கமுடியாத பெற்றோர் தினமும் கதறி துடித்தனர்.

இதையடுத்து, மகன் விஜயக்குமாரின் சிலையை தானே வடிவமைத்து வீட்டில் வைத்து வழிபட்டு வருகிறார் ஈரண்ணாவும் அவரது மனைவியும்.

இதுகுறித்து ஈரண்ணா கூறுகையில், எங்களது மகனை திடீரென பறிகொடுத்துவிட்டோம். இவ்வாறு மகனுக்கு பூஜை செய்வது மூலம் அவன் எங்களோடு இருப்பது போல் இருக்கிறது என்றார் கண்ணீருடன்.

More News >>