மீண்டும் இணைந்த முள்ளும் மலரும் கூட்டணி!

ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரன், தற்போது பேட்ட படத்தில் இணைந்துள்ளார்.

காலா, 2.0 படங்களை தொடர்ந்து ரஜினியின் பேட்ட படம் தீவிரமாக தயாராகி வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படம் தற்போது மல்டி ஸ்டார் படமாகவே மாறியுள்ளது. சமீபத்தில் பேட்ட படத்தின் செகன்ட் லுக் வெளியானது.

விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என பல ஹீரோக்கள் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்துள்ளனர். மேலும், சிம்ரன், த்ரிஷா மற்றும் மேகா ஆகாஷ் என நடிகைகள் பட்டியலும் இப்படத்தில் அதிகம்.

இந்நிலையில், ரஜினியின் எவர்க்ரீன் படமான முள்ளும் மலரும் படத்தை இயக்கிய மகேந்திரன் தெறி, நிமிர் படங்களை தொடர்ந்து, பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் எத்தனை பிரபலங்கள் படத்தில் இணையப் போகின்றனர் என்பது கார்த்திக் சுப்பராஜுக்கு மட்டுமே வெளிச்சம்.

பேட்ட படத்தின் லீக்கான வீடியோக்கள் தந்தி டிவியில் ஒளிபரப்பானதை கண்டித்து, ட்விட்டரில் கார்த்திக் சுப்பராஜ் கடுமையான பதிவு ஒன்றை நேற்று போட்டு இருந்தார்.

அதில், இது நியாமான செயல் அல்ல. ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் லீக்கான வீடியோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

மேலும், இதுபோன்ற ஊடகங்கள் வரும் காலங்களில் பைரசி படங்களையும் போடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என வன்மையான கண்டனத்தை கார்த்திக் சுப்பராஜ் பதிவு செய்தார்.

More News >>