ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஏக்தா பயன்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஆசிய பாரா போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் என மொத்தமாக 302 பேர் கலந்து கொள்கின்றனர். நேற்று ஒரேநாளில் மட்டும் ஈட்டி எறிதல், நீச்சல், ஓட்டப்பந்தயம் என மூன்று தங்கப்பதக்கத்தை வென்றனர்.

இந்நிலையில் மரத்திலான கிளப் துரோவில், பெண்களுக்கான எப்32/51 பிரிவில் இந்தியாவின், ஏக்தா பியன் தங்கப்பதக்கம் வென்றார். இவர் தனது நான்காவது வாய்ப்பில், 16.02 மீ, தூரம் கிளப்பை வீசி அசத்தினார்.

இதில் ஐக்கிய அரவு எமிரகத்தின் அல்காபி தெக்ரா (15.75 மீ) இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு நான்காவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

More News >>