நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு!

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாரை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை ஜாம் பஜார் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணிகளை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிந்தாரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ’நக்கீரன்’ கோபாலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்படும் என போலீஸ் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன. இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த வைகோ கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

More News >>