வண்டலூரில் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள 10வயது புலி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தை தொடர்ந்து, ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

அடுத்ததாக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ரவிக்குமார் இயக்கும் ஏலியன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், சென்னை, வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள அனு என்கிற 10வயது வெள்ளை நிற புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு இவரது பராமரிப்பில் அந்த புலி இருக்கும்.

ஆறு மாதம் அந்த புலியை பராமரிக்கும் செலவுக்காக சுமார் 2.12 லட்சம் ரூபாயை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சிவகார்த்தியேன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மோதி விளையாடு பாப்பா என்ற குறும்படத்தில் காசு வாங்காமல் நடித்தது குறிப்பிடத்தக்கது.

More News >>