பப்புவா நியூ கினியாவில் 7 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கி.மீ., தொலைவில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கடலில் பேரலைகள் எழுந்தது. மேலும், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

More News >>