பிரதமர் முடிவெடுத்துவிட்டார் வேலை தொடங்கிவிட்டது-ராகுல்காந்தி

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார். இந்த கருத்துக்குப் பின் விவகாரம் சூடுபிடித்தது அனில் அம்பானிக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது.

இதை மத்திய அரசு மறுத்தது இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என  தெரிவித்தது. இந்நிலையில் ரஃபேல் விமானம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வுச் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகவேண்டுமெனில், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், டசால்ட் நிறுவன ஆவணத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தகவலை டசால்ட் மறுத்துள்ளது இது தொடர்பாக டசால்ட் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், 'இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனத்தை சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். இந்த விஷயத்தில் எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை' என குறிப்பிட்டுள்ளது.

ரஃபேல் விமானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது குறித்து ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"இது மிகவும் எளிமையானது பிரதமர் முடிவெடுத்துவிட்டார் வேலை தொடங்கிவிட்டது. இதன் தொடர்பாகவே பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார்.’ என ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

 

More News >>