சென்னையில் சுடுகாடு அருகே குழந்தையை வீசி சென்ற கொடூரம்

போரூர் அருகே கைக்குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் சுடுகாடு அருகில் வீசிச் செல்லும் கொடூர காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

போரூர் அருகே உள்ள காரம்பாக்கம் சுடுகாடு அருகே நேற்று நள்ளிரவு பச்சிளம் குழந்தை ஒன்று அழும் குரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற ரவி என்ற வாட்ச்மேன் கைக்குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அந்தக்குழந்தையை அருகிலிருந்து காவல்துறை சோதனைச் சாவடியில் அவர் ஒப்படைத்தார். பின்னர் அக்குழந்தைக்கு சின்னப் போரூர் சுகாதார மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், குழந்தையை அங்கு விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஒரு ஆணும் பெண்ணும் நள்ளிரவில் குழந்தையைப் பையில் அடைத்து சுடுகாடு அருகே விட்டுச் செல்லும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை வீசிச் சென்றவர்கள் பெற்றோரா அல்லது குழந்தைக் கடத்தல் கும்பலா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

More News >>