காலையில் பாஜக- மாலையில் காங்கிரஸ்

தெலங்கானாவில், அதிருப்தி காரணமாக, காலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மாலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருந்த தாமோதர் ராஜாவின் மனைவி பத்மினி ரெட்டி. காங்கிரஸ் நிர்வாகியான இவர், அக்கட்சியில் இருந்து விலகி தெலங்கானா மாநில பாஜக தலைவர் லட்சுமண் முன்னிலையில் பாஜகவின் இணைந்தார்.

பாஜகவில் இணைந்து பத்து மணி நேரம் கூட முடியாத நிலையில், பத்மினி ரெட்டி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம், "காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை தற்போது தான் புரிந்து கொண்டேன்.அதனால் எனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டு, மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டேன்" எனக் கூறியுள்ளார்.

More News >>