சாம்பார் ருசியாக இல்லை: வேதனையில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

சாம்பார் ருசியாக இல்லை என்று கணவன் கூறி தகராறு செய்ததால், வேதனையில் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நீலவரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிபாபு (28). இவரது மனைவி தேவமணி (26). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலிதது திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு, மல்லிகார்ஜூனா (3) என்ற மகனும், 7 மாத மகளும் இருந்தனர்.இந்நிலையில், கடந்த 9ம் தேதி சூரி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உணவு சாப்பிட்டார். அப்போது, சாம்பார் ருசியாக இல்லை என்றுக்கூறி தகராறு செய்துள்ளார்.

இதனால், மனமுடைந்து போன தேவமணி இரவு முழுவதும் அழுதுள்ளார்.இதன்பிறகு, மறுநாள் காலை சூரி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர், தனது குழந்தைகளை அழைத்துச் சென்ற தேவமணி, கண்ணேறு மழைநீர் கால்வாயில் குழந்தைகளை வீசிவிட்டு தானும் அதில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சூரியிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>