விளையாட்டு துறையிலும் புயலை கிளப்பிய மீடூ! #Me too

இந்தியாவில் சமீபத்தில்டிரண்டாகியுள்ல #MeeToo பரப்புரை திரையுலகை தாண்டி, தற்போது விளையாட்டு துறையிலும் புயலை கிளப்பியுள்ளது.

நாட்டில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வரும் அம்சம் தான்  #MeeToo. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரையுலகில் புயலை கிளப்பியுள்ள இந்த விவகாரம், தற்போது விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ(Board of Control for Cricket in India) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ராகுல் ஜோகரி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல பத்திரிக்கையாளர் ஹர்னித் கவுர், தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் ஜோகரியால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்த பெண் குறித்த கட்டுரையை பகிர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிடாமல் இந்த பதிவு இடம்பெற்றுள்ளது,கட்டுரையில் ராகுல் ஜோகிரி அந்த பெண்ணை பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>