நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்: ஜூலை முதல் அமல்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு கட்டாயமாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கும் விதி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான லைசென்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்சை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த மத்திய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றது.

அதேபோல், நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றது.

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதுல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசென் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த லைசென்ஸ்கள் ஏடிஎம் கார்டை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் கியூ.ஆர்.கோடு வழங்கப்படும்.இதில், டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் பதியப்பட்டிருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News >>