மாணவர்கள் கண்முன்னே கூலிப்படையின் வெறிச்செயல்-பெங்களூரில்

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று காலை மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் வகுப்பறையில் நுழைந்து மாணவர்கள் கண்முன்னே தலைமையாசிரியரை தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் புறநகர்ப் பகுதியான தசராஹள்ளியில், ஹவனூர் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில், 20 மாணவர்களுக்கு நேற்று சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. பள்ளியின் முதல்வரான ரங்கநாத் இந்த சிறப்பு வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது அங்கு புகுந்த கூலிப்படை கும்பல் ரங்கநாத்தை 20 மாணவர்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்துள்ளது.

பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி ஓடிவிட்டது. பள்ளிக் கட்டிடம் அமைந்துள்ள நிலம் தொடர்பான தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பள்ளி முதல்வரை அடித்துக் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த ஒருவனை பின்னர் போலீசார் கைது செய்தனர். பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதில் அவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>