பெண்ணின் திருமணத்தால் தற்கொலை செய்த குடும்பம் !

வேறு சாதியை சேர்ந்தவரை தனது மகள் திருமணம் செய்ததால், அந்த பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்த துயர சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள நல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அகதூர் சாமி ( 63 வயது ) விவசாயம் செய்துவரும் இவருக்கு, ஸ்வர்ன லாதா (வயது 53) என்ற மனைவியும், 25 வயதான சினேகா என்ற மகளும் உள்ளனர்.

இவர்களது மகள் சினேகா வேற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவருடன் இருக்கும் காதலை முறித்துகொள்ள வேண்டும் என்று சினேகாவிடம் அவரது தாய் பலமுறை தெரிவித்துள்ளார்.

ஆனால் சினேகா அந்த நபரை திருமணம் செய்துள்ளார். இதை தாங்கிக்கொள்ள இயலாத அவரது பெற்றோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். தந்தை அகதூர் சாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.உயிருக்கு போராடிய ஸ்வர்ன லாதாவை அவரது உறவினர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் சிகிச்சை அளித்தும் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைத்தை சேர்ந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாதி வெறி பிடித்த சமுகத்தில் வாழ்ந்தால் எங்கே பேசியே கொன்றுவிடுவார்கள் என்றும் அதற்காக கொலைவெறி பிடித்த தந்தையாக மாறி மகளை விட்டுகொடுக்க மனம் இல்லாமல் இப்படி ஒரு முடிவை தேடிக்கொண்டார்கள்.

 

பெரும்பாளான பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்துவைக்க பயப்படுவது இந்த வெறி பிடித்த சமுதாயத்திற்காக தான் அந்த நிலை மாற வேண்டும். ஊருடன் ஒட்டி வாழ் என்பதுதான் பழமொழி ஆனால் அதற்காக ஊருக்காக வாழ வேண்டாம். இன்று ஒரு பிரச்சனைப்பற்றி பேசுவர்கள் நாளை வேறு ஒன்றை பற்றி பேசுவார்கள் அவர்களுக்காகஎந்த ஒரு தவறான முடிவை எடுப்பது உங்கள் குடும்பத்திற்கு தான் நஷ்டம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்

More News >>