நவராத்திரி ஸ்பெஷல்: பாதாம் முந்திரி பாயாசம்

நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று அம்மனுக்கு பாதாம் முந்திரி பாயாசம் செய்து அவள் அருளைப் பெறுவோம். அதோடு இப்பாயாசம் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் ஆகும். சரி, செய்ய ஆரம்பிப்போமா.

தேவையான பொருட்கள் :

கெட்டியான பால்-1 லிட்டர, மில்க்மைட் 2 மேஜைக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.

சர்க்கரை-50கிராம்

பச்சரிசி-1/4 கோப்பை

பாதாம் பருப்பு -5

ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி

முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி

நெய் -1 மேஜைக்கரண்டி

குங்குமப்பூ சிட்டிகை

செய்முறை:

பச்சரிசியையும், பாதாம் பருப்பையும், 1 /2 மணிநேரம் ஊற வைக்கவும் ,பிறகு மிக்சியில் குருணையாக அரைத்துக்கொள்ளவேண்டும். முந்திரி திராட்சையை 1 தேக்கரண்டி நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும். அரைத்த அரிசியை, பாலில் கலந்து அடுப்பில் வைத்து இளம் தீயில் கைவிடாது கிளறவும். கலவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு ஒன்று சேர்ந்து கொதிக்கும்போது, மில்க்மைட், வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்தூள் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான நாவூறும் நவராத்திரி ஸ்பெஷல் பாதாம் முந்திரி பாயசம் சில நிமிடங்களில் தயார்.

More News >>