எம்.எல்.ஏ மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் #MeToo

தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

டோலிவுட், கோலிவுட் என பல முன்னணி பிரபலங்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி கடும் சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. மீடூ விவகாரம் வருவதற்கு முன்னரே இவர் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளிப்படுத்தியும். இவரது பேச்சுக்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவருக்கு பின்னால் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.

மேலும் பல பெண்களை வரவழைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்தார். நாங்கள்தான் அரசாங்கம். நாங்கள் நினைத்தால் எந்த முன்னணி நடிகரையும் எனது படத்தில் நடிக்க வைக்க முடியும் என்றார். அவர் என்னிடம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் கூறினார். நான் மேலும் பலரது பெயர்களை ‘மீ டூ’ வில் வெளியிட இருக்கிறேன் என ஸ்ரீரெட்டி கிலி கிளப்பியுள்ளார்.

More News >>