ஆந்திராவிலும் சர்கார் செய்யப்போகும் விஜய் !

மெர்சல் படத்தை தெலுங்கில் அதிரிந்தி என்ற தலைப்பில் வெளியிட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் செய்தது. தற்போது சர்கார் படமும் தெலுங்கில் ரிலீசாகிறது.

தெலுங்கு படங்களான ஒக்கடுவை கில்லியாக மாற்றி ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார் விஜய். தொடர்ந்து போக்கிரி, ஆதி உள்ளிட்ட பல தெலுங்கு படங்களை ரீமேக் செய்தார். ஆனால், தற்போது, மெர்சல் படத்தை நேரடியாக தெலுங்கில் அதிரிந்தி என பெயர் மாற்றம் செய்து வெளியிட்டே சாதனை படைத்தார்.

இந்நிலையில், வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள சர்கார் படத்தையும் தெலுங்கில் அதே டைட்டிலுடன் வெளியிட்டு கல்லா கட்டவுள்ளனராம். தெலுங்கு தேசத்தில் அசோக் வல்லபாணி தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளாராம்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படம் எடுத்து டோலிவுட்டுக்கு பரீட்சையமானவர் என்பதால், ஆந்திராவிலும் சர்காருக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>