தனியார் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு முதியவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் கவனக்குறைவுடன் இயக்கப்பட்ட தனியார் பேருந்து முதியவர் ஒருவர் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் பேரனுடன் சொந்த ஊர் செல்வதற்காக ஆரணி பழைய பேருந்து நிலையம் வந்திருந்தார். அப்போது கவனக்குறைவுடன் இயக்கப்பட்ட ஸ்ரீ ராமஜெயம் என்ற தனியார் பேருந்து முதியவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார் இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

போக்குவரத்து பிரச்சனை காரணமாக 108 ஆம்புலன்ஸ் வரத் தாமதமான நிலையில், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் சுற்றி நின்றவர்கள் உயிருக்குப் போராடிய முதியவரை வேடிக்கை மட்டுமே பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு இருந்த  செய்தியாளரின் முயற்சியோடு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட முதியவர் வழியிலேயே உயிரிழந்தார். தப்பியோடிய பேருந்தின் ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

More News >>