கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைக்கு தடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு நீர் வழங்குவதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள், கடந்த இரு தினங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மாநகரில் உள்ள பெரும் வணிக நிறுவனங்களில் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை தலைமைச்செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

More News >>