தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர்! சென்னையில்

சென்னையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு சாலையோரத்தில் மூர்த்தி என்ற இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு வாலிபர் கஞ்சா போதையில் மூர்த்தியை கடித்து குதறினார், வலி தாங்காமல் மூர்த்தி கதறினார் அவரது கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மூர்த்தியை மீட்டனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போதை ஆசாமியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் ஜதிதீ என்பதும் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது பின்னர் அவரை கைது செய்த போலீசார் புழல் மத்தியசிறையில் அடைத்தனர்.

More News >>