சாய்பாபாவின் மகா சமாதி தினம் இன்று..! பிரதமர் மோடி ஷீரடி வருகை

மகா சமாதி தினத்தை முன்னிட்டு இன்று ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்து தரிசித்து பின்னர் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்படுகிறது. ஷீரடி சாய்பாபா விஜயதசமி அன்று மகா சமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் 100வது தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நிறைவு நாள் மற்றும் சாய்பாபா மகா சமாதி நிறைவு நாளான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதை முன்னிட்டு, சிறப்பு பூஜையில் பங்கேற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஷீரடி செல்கிறார்.

இதன்பிறகு, பக்தர்களின் வசதிக்காக புதிதாக கட்டப்படவுள்ள மண்டபத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாயணத்தை மோடி வெளியிடுகிறார்.

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு வழங்கவுள்ளார். பிரதமர் மோடி ஷீரடி செல்வதையட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More News >>