டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய லாரி மோதி 27 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் டயர் வெடித்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடி எதிரே சென்ற வாகனங்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகி உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால், நிலைக்குலைந்து போன லாரி முன்னால் சென்ற வாகனங்கள் மீது தாறுமாறாக மோதியது. விபத்தில், ஏராளமானோர்  சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில், இந்த கோர விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் பலியாயினர் என்பது தெரிவயந்தது. மேலும், படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து எதிரொலியால் சாலை சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது. போலீசார் விரைந்து போக்குவரத்தை சீரமைத்ததை அடுத்து, வாகனங்கள் வழக்கம்போல் இயங்க ஆரம்பித்தன. சாலை விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News >>