பாக்ஸ் ஆபிஸ் கிங்கான வடசென்னை !

வடசென்னை திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஐஸ்வர்ய ராஜேஷ், ஆண்ட்ரியா என நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி வடசென்னை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமி என பண்டிகை காலத்தில் படம் வெளியானதால், தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, வடசென்னை தமிழகத்தில் மட்டுமே 3 நாட்களில் ரூ 18 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது.

உலகம் முழுவதும் இப்படம் எப்படியும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலை தொட்டு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வடசென்னை தான் தனுஷின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வசூலை கொடுத்த படமாம். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் மீதம் உள்ளதால், படத்தின் வசூல், 40 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More News >>