நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார் #MeToo

நிபுணன் படத்தில் நடிக்கும் போது, நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் #MeTooவில் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி அர்ஜுன் நடிப்பில் வெளியான நிபுணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நிபுணன் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நிபுணன் படம் வெற்றி பெறாத நிலையில், நடிகை ஸ்ருதிக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அது பொய், நடிகர் அர்ஜுன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களும் என்னிடம் தவறாக நடந்து கொண்டேன். இதுகுறித்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே புகார் ஒன்றையும் அளித்திருந்தேன். அதனால் தான் தனக்கு தமிழ் சினிமா வாய்ப்பு பறிபோனது என்று கூறியுள்ளார்.

வைரமுத்து – சின்மயி விவகாரத்திலேயே தமிழ் சினிமா ஆடிப்போய் உள்ள நிலையில், அடுத்த வெடிகுண்டாக அர்ஜுன் மீது பாலியல் புகார் கிளம்பியுள்ளது. தேச பக்தி உணர்வு கொண்ட அர்ஜுனா இப்படி செய்து விட்டார் என்றும், அர்ஜுன் அப்படி செய்திருக்க மாட்டார் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக மாறுகிறதா? அல்லது ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் படவாய்ப்பு கொடுத்தது போல செட்டில்மெண்ட் நடக்கப்போகிறதா என்று பார்ப்போம்.

More News >>