அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டர்!

நாகையில் அமைச்சர் ஓ எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டருக்கு தர்ம அடி விழுந்தது.

அதிமுக தொடங்கப்பட்ட 47 ஆண்டு பொதுக்கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவில் அமைச்சர் ஓ. எஸ்.மணியன் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென மேடையில் ஏறிய அதிமுக தொண்டர் ஒருவர், மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் மீது காலணியை வீச முயன்றார். உடனே அவரை தடுத்த அங்கிருந்த நிர்வாகிகள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வெளிப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் செருப்பு வீசிய நபர் கீழையூர் ஒன்றியம் கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பதும், கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் செருப்பு வீசியதும் தெரியவந்துள்ளது.

More News >>