தீபிகா படுகோன் ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு !

பாலிவுட் குயின் தீபிகா படுகோன் மற்றும் நடிப்பு ராட்சசன் ரன்வீர் சிங்கின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் 2013ஆம் ஆண்டு வெளியான ராம்லீலா படத்தில், ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி அபாரமாக நடித்திருந்தனர். இருவருக்குள்ளான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக பாராட்டுக்கள் குவிந்தன. அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின.

ஆனால், இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாரின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் வரும் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இல்வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேஎன்’ என தீபிகா படுகோன் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் இணைந்து இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளனர். 2013ஆம் ஆண்டில் வெளியான ராம்லீலா, 2014ல் வெளியான ஃபைண்டிங் ஃபானி, 2015ல் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளிய பாஜிராவ் மஸ்தானி, 2018ல் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பல தடைகளை தாண்டி வெளியான பத்மாவத் என இவர்கள் இணைந்து நடித்த படங்கள் பாலிவுட்டில் மிக முக்கியமானவை.

இருவரது திருமணம் பாலிவுட்டில் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை அறிவித்த நிலையில், இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

More News >>